" வீட்டில் பிரசவம் பார்த்தது, சட்டப்படி தவறு " - துணை முதல்வர் கண்டனம்

அரசு விதிகளுக்கு மாறாக, வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது தவறு என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-04 16:43 GMT
அரசு விதிகளுக்கு மாறாக, வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது தவறு என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.தேனி அருகே தாடிச்சேரி, நாகலாபுரம், சிவலிங்க நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படித்தவர்களே, இதுபோன்று வீட்டில் பிரசவம் பார்ப்பதா? என கேள்வி எழுப்பினார்.இதுபோன்ற செயல்கள், விரைவில் சரி செய்யப்படும் என்று ஓ. பன்னீர் செல்வம் உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்