12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில், மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவத்தில், அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர் பூச்சிக் கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.