சாதிய வன்கொடுமையிலும் படிப்பில் சாதித்த மாணவன்.. வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2024-05-07 06:13 GMT

நாங்குநேரியில், சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், அவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில், 469 மதிப்பெண்கள் பெற்ற சின்னதுரைக்கு, அலைபேசியில் அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சின்னதுரையின் உயர்கல்வி செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ள அமைச்சர், தனது துறை உதவியாளரின் தொடர்பு எண்ணை வழங்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்