"5 ஆண்டு ஆட்சியில் திமுக என்ன செய்தது?" - பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

Update: 2021-02-18 07:33 GMT
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆறாவது கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி,
தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பய செய்து வருகிறார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரசாரம், மேற்கொண்ட அவர், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்த போது, செய்த பணிகள் என்ன என கேள்வி எழுப்பினார். தற்போது அதிமுக அரசே மக்களை நாடி வந்து மனுக்களை பெற்று, குறைகளை தீர்ப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்