விமானப்படை கான்வாய் மீது தாக்கிய பயங்கரவாதிகள் காஷ்மீரில் அதிர்ச்சி

Update: 2024-05-05 02:01 GMT

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் விமானப்படை கான்வாய் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீர‌ர்கள் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

சூரன்கொட் பகுதியில் சனாய் கிராமத்திற்கு அருகே ஷாசிதார் பகுதியில் இந்திய விமானப்படையின் பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்த‌து. அப்போது, வாகனத்தை நோக்கி, பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த வீர‌ர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, உதம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியை சுற்றி வளைத்து உள்ளூர் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. மேலும், விமானப்படையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்