எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள் விவாதிக்க தயாரா ? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால்

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பொதுமேடையில் விவாதிக்க தயாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2019-07-16 12:22 GMT
புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பொதுமேடையில் விவாதிக்க தயாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக்கொள்கை குறித்து சமூகப் பொறுப்போடும், எதிர்காலம் குறித்த அக்கறையோடும் நடிகர் சூர்யா பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் கருத்தை வெல்ல முடியாத பாஜக தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில்  மீது தாக்குதல் தொடுப்பதை கண்டிப்பதாகவும், புதிய கல்வி கொள்கை குறித்து பொது மேடையில் அவர்கள் விவாதிக்கத் தயாரா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்