செம்மரக்கடத்தல் - முக்கிய நபர் கைது : 620 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சித்தூர் அருகே பேனூமூர் என்ற இடத்தில் செம்மரக்கட்டை தடுப்புப் பிரிவினர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2019-07-19 21:41 GMT
சித்தூர் அருகே  பேனூமூர் என்ற இடத்தில் செம்மரக்கட்டை தடுப்புப் பிரிவினர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்ட போது  620 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து  பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காரில் இருந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அணைக்கட்டு தொகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பது தெரியவந்தது. அவர் சர்வதேச அளவில் சந்தன கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்