1 மாத குழந்தைக்கு - எமனாக மாறிய பெற்ற தாய் - நெஞ்சை உலுக்கும் பகீர் காரணம்

Update: 2024-05-02 06:03 GMT

மேலசம்போடை கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, திருமணமாகாமல் கர்ப்பம் தரித்து 30 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பெற்றார். இந்நிலையில், வீட்டில் இருந்து குழந்தையை மர்மநபர்கள் தூக்கிச்சென்றதாக குழந்தையின் தாய் அளித்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார், தாய் மஞ்சுளாவிடம் விசாரித்தனர். தவறு செய்ததை சுட்டிக்காட்டி தனது குடும்பத்தினர் அடிக்கடி திட்டியதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்ததாகவும் இதனால், குழந்தையைக் கொன்று புதைத்ததாகவும் மஞ்சுளா கூறிய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்