விரைவில் மின்சார ஆட்டோ அறிமுகம் - கேரள முதலமைச்சர் தகவல்
வாகனங்களால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுவை குறைக்கும் வகையில் விரைவில் மின்சார ஆட்டோ விற்பனைக்கு வரவுள்ளதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தொடர்பாக சமூக வலைதளத்தில் பதவிட்டுள்ள அவர், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அனுமதி சான்று கிடைத்தவுடன் மின்சார ஆட்டோ விற்பனைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரம் மின்சாரம் சேமித்தால் நூறு கிலோ மீட்டர் பயணிக்கலாம் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.