தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது - ப.சிதம்பரம்

மக்களின் மனநிலையைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-12-12 03:17 GMT
மக்களின் மனநிலையைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஆதரித்த இரண்டு பேருக்கு, முக்கிய பதவிகளை வழங்கியதன் மூலம், தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டும் தான் செய்வோம் என்ற  மோடி அரசின் மனநிலை, மக்களுக்கு தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்