அதிகாலையில் திடீர் தீ விபத்து - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-04-28 09:14 GMT

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்த நிலையில், உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிர் சேதம் இல்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்