பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு : மாவோயிஸ்ட்களை காங்கிரஸ் ஆதரிப்பதாக புகார்

சட்டீஸ்கர் மாநிலத்தில், நகர்புறத்தில் வசிக்கும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவளித்து, ஆதிவாசி இளைஞர்களின் வாழ்க்கையை, காங்கிரஸ் கட்சி சூறையாடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்

Update: 2018-11-09 11:58 GMT
சட்டீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற 11ஆம் தேதி, மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒட்டி, பிரதமர் நரேந்திரமோடி, ஜக்தால்பூரில் பிரசார கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆதிவாசிகளை காங்கிரஸ் கட்சி எப்போதும் கேலியாக பார்ப்பதாக புகார் தெரிவித்தார். ஒரு புறம் நகர்புறத்தில் வசிக்கும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவளித்து விட்டு, மாவோயிஸ்ட் இல்லாத மாநிலத்தை உருவாக்குவோம் என காங்கிரஸ் கட்சி பொய் உரைப்பதாக பிரதமர் மோடி, குற்றஞ்சாட்டினார். பொய் உரைக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் முகத்திரையை அகற்ற வேண்டும் என்றும் சட்டீஸ்கர் மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்