தேர்தல் விதிகளை மீறிய அதிமுக மா.செ. - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-04-30 09:12 GMT

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருக்கு முன் ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, பட்டாசு வெடித்தது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் உதகை மத்திய காவல் நிலையத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் உட்பட 20 அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீதும், பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மீது 2 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்ஜாமின் கோரி

கப்பச்சி வினோத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்