பஞ்சாப் : பலியானோர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம்

அமிர்தசரஸ் ரயில் விபத்து இதயத்தை நொறுங்கச் செய்யும் துக்கம் மிகுந்த சம்பவம் என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-19 21:03 GMT
அமிர்தசரஸ் ரயில் விபத்து இதயத்தை நொறுங்கச் செய்யும் துக்கம் மிகுந்த சம்பவம் என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். பலியானோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி, மத்திய அரசு சார்பாக தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் தேவையான உதவிகளை செய்யுமாறு மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்