பஞ்சாப் : பலியானோர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம்
அமிர்தசரஸ் ரயில் விபத்து இதயத்தை நொறுங்கச் செய்யும் துக்கம் மிகுந்த சம்பவம் என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸ் ரயில் விபத்து இதயத்தை நொறுங்கச் செய்யும் துக்கம் மிகுந்த சம்பவம் என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். பலியானோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி, மத்திய அரசு சார்பாக தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் தேவையான உதவிகளை செய்யுமாறு மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.