"ராணுவ ஆட்சி செய்ய முடியும் - ஆனால் விரும்பவில்லை" - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ பேச்சு

"ராணுவ ஆட்சி செய்ய முடியும் - ஆனால் விரும்பவில்லை" - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ பேச்சு

Update: 2021-11-08 12:53 GMT
"ராணுவ ஆட்சி செய்ய முடியும் - ஆனால் விரும்பவில்லை" - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ பேச்சு

விவசாயிகளின் கழுத்தை நெரித்து திட்டத்தை நிறைவேற்றும் ராணுவ ஆட்சி செய்ய தான் விரும்பவில்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விவசாயிகள் போராட்டம் குறித்து கடுமையாக சாடினார். தான் ராணுவ ஆட்சியாளராக வருவேன் என மக்கள் வாக்களித்ததாகவும், ஆனால், தான் அதை விரும்பவில்லை என்றும் கோத்தபய கூறினார். மேலும், உரத்தட்டுப்பாடு குறித்து போராடிவரும் விவசாயிகளின் கழுத்தை பிடித்து நெரித்து, மாற்று உரத்தை பயன்படுத்த வைக்க முடியும் என்ற கோத்தபய, அதை விரும்பவில்லை என தெரிவித்தார். 'நல்லாட்சி' அரசாங்கத்தின் கீழ், முன்னாள் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாக கூறினார். 
 


Tags:    

மேலும் செய்திகள்