ஈராக்கில் பயங்கரவாத தாக்குதல் - ஒரு பெண் உட்பட 14 பேர் பலி

ஈராக்கில் பயங்கரவாத தாக்குதலால் பலியானவர்களின் இறுதிச் சடங்குகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2021-10-28 10:37 GMT
ஈராக்கில் பயங்கரவாத தாக்குதலால் பலியானவர்களின் இறுதிச் சடங்குகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈராக் நாட்டின் முக்தாடியா நகருக்கு அருகிலுள்ள அல்-ஹவாஷா கிராமத்தில் செவ்வாய்கிழமை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற கிராமப் பகுதியில் தங்களைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகள் இல்லையென்றும், கிராம மக்கள் நிராயுதபாணியாக நிற்பதாகவும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட இறந்தவர்களின் உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்