இந்தியாவே எதிர்பார்த்த தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர்களை அறிவித்த காங்.

Update: 2024-05-06 13:49 GMT

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுகின்றனர். இவ்விரு தொகுதிகளுக்கும் மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ரேபரேலி தொகுதிக்கு சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலும், அமேதி தொகுதிக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்