வெயிலில் விளையாடிய 2 வயது குழந்தை மரணம் - பெற்றோர்களே உஷார்..!

Update: 2024-05-06 13:47 GMT

சின்னசேலம் அடுத்த கூகையூரை சேர்ந்த சின்னதுரையின் 2வயது மகன் முரளி கிருஷ்ணன், வெயிலில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் உடல் சோர்வுடன் வீடு திரும்பிய குழந்தைக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்து தாய் உறங்க வைத்துள்ளார். இன்று அதிகாலை எழுந்த போது 2வயது குழந்தை முரளிகிருஷ்ணன் இறந்து கிடந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சுட்டெரித்த வெயிலால்தான் குழந்தை இறந்ததா? வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்