மொத்த கவனத்தையும் திருப்பிய `ஸ்ரீமதி'யின் மார்க்... ஆச்சரியத்தில் கள்ளக்குறிச்சி

Update: 2024-05-06 13:55 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் பகுதியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தால் கலவரம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில் படித்த ஸ்ரீமதி என்ற மாணவி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது... தென் செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்... கடந்த 2 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி முதலிடம் பிடித்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்