சட்ட விரோதமாகக் கடத்தப்பட்ட ஹெராயின் - இந்திய மதிப்பில் ரூ.780 கோடிக்கும் அதிகம்

ஆஸ்திரேலியாவில் கப்பலில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 780 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான ஹெராயினை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Update: 2021-10-16 13:03 GMT
ஆஸ்திரேலியாவில் கப்பலில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 780 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான ஹெராயினை அதிகாரிகள் கைப்பற்றினர். மலேசியாவில் இருந்து மெல்போர்னுக்கு கடத்தி வரப்பட்ட 450 கிலோ கிராம் எடையுள்ள ஹெராயின் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக மலேசியாவை சேர்ந்த ஒருவரைப் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட ஹெராயின் இந்திய மதிப்பில் 780 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்