ஆஜரானார் நடிகர் பவர் ஸ்டார் - ஒரே வார்த்தையில் சொன்ன பதில்

Update: 2024-05-07 14:23 GMT

செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இறால் பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் பண்ணை அபிவிருத்திக்காக 150 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக 15 லட்ச ரூபாய் கமிஷன் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது இறால் பண்ணை உரிமையாளர் புகார் கொடுத்திருந்தார். வழக்கு விசாரணைக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் ராமநாதபுரம் ஜெ.எம். 2 நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிக்குத் தலை வணங்குவதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்