நாடாளுமன்றத்தில் இருந்த முன்னாள் தளபதியின் சிலை நீக்கம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்த முன்னாள் தளபதி ராபர்ட் லீ யின் உருவ சிலையை அமெரிக்க அரசு நீக்கி உள்ளது.

Update: 2020-12-22 09:29 GMT
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்த முன்னாள் தளபதி ராபர்ட் லீ யின் உருவ சிலையை அமெரிக்க அரசு நீக்கி உள்ளது. 1860-ஆம் ஆண்டு முதல் 1865-ஆம் வரை நடந்த கருப்பின அடிமை முறை போராட்டத்தில் கூட்டமைப்பு மாகாணங்களின் தளபதியாக ராபர்ட் லீ பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில் அடிமை முறைக்கு ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக அவரது சிலையை நீக்க அமெரிக்க அரசு முடிவு செய்து உள்ளது. மேலும் அதே இடத்தில் அமெரிக்க கருப்பின மக்களுக்காக போராடிய கருப்பின பெண்மணி பார்பரா ஜான்ஸ்சின் சிலையை நிறுவ முடிவு செய்து உள்ளது.     

Tags:    

மேலும் செய்திகள்