பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு விருது

உலக அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பாடுபட்டதற்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு விருது வழங்கி தென்கொரியா கௌரவித்துள்ளது.

Update: 2019-02-22 13:03 GMT
சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தி, உலக அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பங்காற்றி, இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுக்கு வித்திடும் வகையில் சேவை புரிந்தமைக்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு விருது வழங்கப்பட்டுள்ளது. தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர்,  ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட விருது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வெற்றிக்காக வழங்கப்பட்ட விருது என்றும்  தெரிவித்தார். பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மூலமாக இந்தியாவில்  தூய்மையான ஊழலற்ற அரசு அமைய முயற்சி மேற்கொண்டதாக மோடிக்கு
விருது தேர்வுக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்