இலங்கை அரசியலில் புதிய திருப்பம் : பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ராஜபக்சே

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார்.

Update: 2018-12-15 08:26 GMT
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். இதன் மூலம் அந்நாட்டில் கடந்த 50 நாட்களாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26-ம் தேதி புதிய பிரதமராக ராஜபக்சேவை, அதிபர் சிறிசேன நியமித்தார். 

இதையடுத்து இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட சிறிசேன, ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம்,  சிறிசேன உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது. 

மேலும் ராஜபக்சே பிரதமராக செயல்படவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதாக அதிபர் சிறிசேன அறிவித்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் நாளை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்