காகிதங்களில் வழங்கப்படும் எக்ஸ்ரே பதிவுகள் - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பதிவுகள் காகிதங்களில் வழங்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-10-06 13:20 GMT
அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பதிவுகள் காகிதங்களில் வழங்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,  அதிமுக அரசு மக்கள் நல்வாழ்வு துறைக்கு19 ஆயிரது 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக அரசு 18 ஆயிரத்து 933 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதன் காரணமாக கோவில்பட்டியில்  உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பதிவுகள் காகிதங்களில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். இதன் காரணமாக வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற முடியாத சூழல் உள்ளதால், அரசு உடனடியாக எக்ஸ்ரே முடிவுகளை படச்சுருளில் வழங்க ஆவணம் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


Tags:    

மேலும் செய்திகள்