கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

தருமபுரி மாவட்டம் பச்சப்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2020-11-19 17:07 GMT
தருமபுரி மாவட்டம் பச்சப்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த  யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது. யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினரும் தீயணைப்பு துறையினரும் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறை அதிகாரிகள்,  பெல்ட் கட்டி கிரேன் மூலம் மேலே தூக்கி, யானையை உயிருடன் மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்