தடைகளை உடைத்து +2 தேர்வில் சாதனை படைத்த திருநங்கை - குவியும் பாராட்டு

Update: 2024-05-06 12:52 GMT

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் நிவேதா என்கிற திருநங்கை தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்... நிவேதா தான் படித்த லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாணவி நிவேதாவிற்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவிக்க சக திருநங்கைகளும் மாணவிகளும் அவரை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்... பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நிவேதாவுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. தடைகள் இல்லாமல் நேரடியாகவே பள்ளியில் இடம் கிடைத்தால் தன்னைப் போன்று ஏராளமான திருநங்கைகள் பள்ளியில் சேர்ந்து படிப்பர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்