கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

Update: 2020-09-24 07:06 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.  இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கே.எஸ்.விஜயகுமார் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது,.
Tags:    

மேலும் செய்திகள்