விருத்தாச்சலம்: மருத்துவமனையில் எலித்தொல்லை - தாய்மார்கள் அவதி

விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2020-09-20 12:07 GMT
 கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில், மகப்பேறு வார்டில் எலிகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. தரையில் துளை போட்டு இரவு நேரங்களில் எலிகள் அவ்வப்போது வந்து செல்வதால், குழந்தைகளை பாதுகாப்பதற்காக தாய்மார்கள் விழித்துக்கிடக்க வேண்டியுள்ளது. இதனால் தூக்கமின்றி தவித்துவரும் தாய்மார்கள், எலித்தொல்லைக்கு மருத்துவமனை நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்