வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது - அமைச்சர் சொன்ன தகவல்

Update: 2024-04-29 10:56 GMT

ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக சார்பில் புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் மோர் உள்ளிட்டவைகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி, வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அணையில் போதுமான தண்ணீர் இல்லை என்றும், பவானிசாகர் அணையில் குடிநீருக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்