சிறையில் கெஜ்ரிவால்.. "மனைவிக்கே அனுமதியில்லை".. AAP எம்பி பரபரப்பு பேச்சு

Update: 2024-04-29 11:17 GMT

சிறையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் கூட, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், மத்திய பாஜக அரசின் கெடுபிடியும், சர்வாதிகாரமும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார். சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை கூட வழங்காமல், அரவிந்த் கெஜ்ரிவால் சித்ரவதை செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். பிரதமர் மற்றும் துணைநிலை ஆளுநர் அலுவலகங்கள் அவரை 24 மணிநேரமும் சிசிடிவி மூலம் கண்காணித்து வருவதாகவும், டெல்லி அரசு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தற்போது, அவரது மனைவி சந்திப்பதற்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்