வரலாறு காணாத வெயில்... பாறைகளாய் மாறிய ஒகேனக்கல் - வாடி வதங்கும் உயிர்கள்.. வெளியான வீடியோ காட்சிகள்

Update: 2024-04-29 11:19 GMT

வரலாறு காணாத வெயில் வாட்டி வருவதாலும், கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தர மறுப்பதாலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி நீர் வரத்தின்றி பாறைகளாக காட்சி அளிக்கிறது... காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும், தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பதால் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் வழியின்றி தமிழக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதி முழுவதும் நீர் நிரம்பியிருந்த காலம் மறைந்து, தற்போது பாறைகள் மட்டுமே காட்சியளிக்கிறது. ஐந்தருவி, ஐவர் பானி, உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக காய்ந்து கிடக்கின்றன...

Tags:    

மேலும் செய்திகள்