2 வது நாளாக வேகமாக பரவும் காட்டுத்தீ - தீயை அணைக்க போராடும் வனத்துறை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க இரண்டாவது நாளாக வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

Update: 2020-07-07 09:02 GMT
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில், ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க, இரண்டாவது நாளாக வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். போதிய உபகரணங்கள் இல்லாத காரணத்தால், மலைச்சரிவில் நின்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் தீயை அணைக்க போராடி வருகின்றனர். எனவே, பல்வேறு மாநிலங்களில் உள்ளது போன்று காட்டுத்தீயை அணைக்க, போதிய உபகரணங்கள் வசதியை செய்து தர வேண்டும் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்