மலர்களே..மலர்களே...கொடைக்கானல்,ஊட்டிக்கு குவியும் மக்கள்

Update: 2024-05-05 11:25 GMT

1. கொடைக்கானல், நீலகிரி

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில், சுமார் ஆயிரத்து 500 வகை ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. குறிப்பாக சன் கோல்டு, சம்மர் டிரீம், பிரின்சஸ், பெர்ஃப்யூம், டிலைட், ஈஃபிள் டவர் உள்ளிட்ட ரோஜா மலர்கள் காண்போர் கண்களை கவர்ந்த வண்ணம் உள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்கள் முன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

2. ஊட்டி, நீலகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மிதமான சீதோஷ்ணம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டுரசித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்