மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ: பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடல்

மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ பரவிய சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

Update: 2020-07-04 07:51 GMT
மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ பரவிய சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது, மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் என 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனோ பரவியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை மூடப்பட்டது . அங்கு  சிகிச்சை பெற்று வந்த உள் நோயாளிகள் , கொரோனோ நோயாளிகள் உட்பட அனைவரும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மருத்துவமனை மூடப்பட்டு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்