லாரி ஓட்டுநரின் மர்ம மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் - இறந்தவரின் உடலை கத்தியால் குத்தி நாடகமாடிய தந்தை உட்பட இரு மகன்கள் கைது

மின்வேலி மரணத்தை கொலையாக மாற்ற முயற்சி செய்து சிக்கிய ஒரு குடும்பம்

Update: 2020-06-06 11:28 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகனை நேற்று முன்தினம் அதிலிருந்து காணவில்லை என்று அவரது தாயார் தேடி வந்துள்ளார். இந்நிலையில், புதுப்பேட்டை ரெட்டி குப்பம் பகுதியில் உள்ள கொய்யா தோட்டத்தில் உடலில் கத்தியால் குத்தப்பட்ட ரத்த காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், அவர் காணாமல் போன பாலமுருகன் என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட பாலமுருகனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்சாரம் பாய்ச்சியும் கத்தியால் குத்தியும் பாலமுருகன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ஆசை என்பவரின் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்க அனுமதியின்றி மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்ததும், அதில் சிக்கி பாலமுருகன் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனை மறைக்க தனது மகன்களான ஆனந்தராஜ் மட்டும் அன்புராஜுவுடன் சேர்ந்து பாலமுருகனின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி, உடலை கத்தியால் குத்தி கொலை நடந்தது போல் சித்தரித்து உள்ளார்,ஆசை இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரை கொலை செய்யப்பட்டதாக சித்தரித்து நாடகமாடிய சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்