அரசுக்கு எதிராக போராடிய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நீக்கம்
தேனி மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்தார்.
தேனி மாவட்டத்தில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண், காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்தார். நாராயண தேவன் பட்டியை சேர்ந்த பிரேமா என்ற பெண், கடந்த 2016, 17, மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் தனி இயக்கத்தில் தம்மை இணைத்து கொண்டு அரசுக்கு எதிராக போராடி வந்துள்ளார். இதனால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்தது.