பக்கத்து வீட்டு ரகசியத்தை அப்பாவிடம் போட்டு கொடுத்ததால் மகன் வெறிச்செயல்.. நடுங்கிய நலன்விரும்பி

Update: 2024-05-02 06:06 GMT

நாட்றம்பள்ளி அடுத்த சமையக்காரனூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில், கடந்த 27ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், மண்ணெண்ணெய் குண்டை வீசிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், சரவணன் வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணை அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர் காதலித்து வந்ததாகவும், அதனை சரவணன், அஸ்வினின் தந்தையிடம் கூறியதால், ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்