யதேச்சையாக சோதனை போட்ட போலீஸ்.. ஆம்னிக்குள் அள்ள அள்ள கிடைத்த அதிர்ச்சி

Update: 2024-05-02 06:10 GMT

ஆரணி அருகே ஆம்னி காரில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

களம்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை திண்பண்டங்களுக்கு இடையே மறைத்து கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரை ஓட்டிவந்த சிவக்குமார், சுரேஷ்பாபு இருவரை கைது செய்து, குடோனில் பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்த வடமாநில வியாபாரி பரத்குமாரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்