திருச்சியை உலுக்கிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை... கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Update: 2024-05-02 06:17 GMT

திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள்சேகர். இவரது சகோதரர் பெரியசாமி. இவர்கள் இருவரும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டு பின்னர் இது முன்விரோதமாக மாறியது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் சேகர் வெட்டிக் கொல்லப்பட்டார். பழிக்குபழியாக 2021ம் ஆண்டு பெரியசாமியின் மகன் சிலம்பரசன் கொலை செய்யப்பட்டார். இதனால், இரு குடும்பத்தினருக்கும் முன்விரோத பகை இருந்து வருகிறது.

இந்நிலையில், கேபிள் சேகரின் மூத்த மகன் முத்துகுமார், பிபிஏ படித்துவிட்டு தொழிலை கவனித்துவந்தார். சம்பவத்தன்று, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரி அருகே நின்றிருந்த முத்துகுமாரை சுற்றிவளைத்த மர்மநபர்கள், சரமாரியாக வெட்டி விட்டு, தப்பியோடினர். இதில் முகம், தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே முத்துகுமார் உயிரிழந்தார். அண்ணன் கொலைக்கு பழிக்குபழியாக முத்துகுமாரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டி வெட்டிக் கொன்றதாக வழக்கில் கைதாகியுள்ள சிலம்பரன் தம்பி லோகநாதன் வாக்குமூலம் அளித்துள்ளார். லோகநாதன் உட்பட அவரது கூட்டாளிகள் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்