ஐஐடி உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பான வழக்கு - மத்திய மனிதவளத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை ஐ.ஐ.டியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்,பேராசிரியர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அறிவிக்ககோரிய வழக்கில் மத்திய மனிதவளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-02 15:06 GMT
சென்னை ஐ.ஐ.டியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்,பேராசிரியர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அறிவிக்ககோரிய வழக்கில் மத்திய மனிதவளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த டாக்டர் வினோத் குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டதாகவும்,  ஆனால் அதன் பிறகு எந்த பதிலும் இல்லை என தெரிவித்துளளார்.மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயர்கல்வி செயலாளர், ஐஐடி செயலர் உள்ளிட்டோர்  ஜூன் 30 ஆம்  தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்