சென்னையின் 2வது ஏர்போர்ட்.. 650வது நாளில் நாமம் போட்டு போராடும் மக்கள்

Update: 2024-05-06 03:48 GMT

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 650 ஆவது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரத்து 746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு

தற்பொழுது நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர் போராட்டம் 650 வது நாளை எட்டிய நிலையில் கிராமத்தில் உள்ள ஆண்கள்

நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்