ஹை அலர்ட்.. இன்று மாலை.. தீவிர புயலாக வலுவடையும் 'ரீமால்'

Update: 2024-05-26 02:42 GMT

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ரீமால் புயல் இன்று தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் ரிமால் புயலாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. தொடர்ந்து புயல் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வுமைம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவில் வங்கதேசம் அதை ஒட்டிய மேற்குவங்கக் கடற்கரையான சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்