குவைத் சிறையில் சிக்கிய 4 தமிழர் - கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம்

Update: 2024-05-06 04:04 GMT

குவைத் நாட்டு சிறையில் உள்ள 4 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோர்ப்பண்ணை கிராமத்தை சேர்ந்த சந்துரு, சேசு, கார்த்திக், வினோத்குமார் ஆகியோர் குவைத் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட போது அவர்களது படகில் போதைப்பொருள் இருந்ததாக கூறி குவைத் போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் வரும் 7ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அவர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்