டெல்லியில் கோபத்தில் சீறிய அண்ணாமலை | Annamalai

Update: 2024-05-06 03:19 GMT

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை சூறையாடிய கட்சி காங்கிரஸ் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். டெல்லியில் பேட்டி அளித்த அவர், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இருந்தபோதுதான் எமர்ஜென்சியை கொண்டு வந்தார்கள் என்று கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு காங்கிரஸ் ஒருபோதும் மரியாதை கொடுத்ததில்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு மரியாதை கொடுக்கும் கட்சி பாஜக மட்டும் தான் என்றும் அவர் கூறினார். வரும் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்