16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - சிறுமியின் தாய், கணவர் மீது வழக்கு பதிவு

கோவை பேரூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தாய், கடந்த பிப்ரவரி மாதம் 23 வயதான இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

Update: 2020-05-29 13:56 GMT
கோவை பேரூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தாய், கடந்த பிப்ரவரி மாதம் 23 வயதான இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே சிறுமி கர்ப்பமானது தெரியவந்ததை தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில், சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் மீது திருமண சட்டத்தின் கீழ் வழக்கும், திருமணம் செய்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்