பற்றியெரியும் கொடைக்கானல்... வானை மறைத்த புகை மூட்டம்... பொதுமக்கள் பீதி

Update: 2024-04-28 14:42 GMT

கொடைக்கானல் மேல்மலை கிராம வனப்பகுதிகளில் நான்காவது நாளாக தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க 300-க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

கடும் வெப்பத்தால் அவ்வப்போது தீப்பற்றுவதும், அணைவதும் வாடிக்கையாக இருந்து வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் பகுதிகளில் தீ பரவி பற்றி கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தேனி, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 300 க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்