சௌமியா அன்புமணி,மகள் குறித்து அவதூறு - அதிமுக பிரமுகரை தட்டி தூக்கிய போலீஸ் - போராட்டத்தில் ஈடுபட்ட விசிக கட்சினர்

Update: 2024-04-28 14:47 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி மற்றும் பெண்களை ஆபாசமாக முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

அவரை விடுவிக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

காடையாம்பட்டி தாலுக்கா பொம்மியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார், அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தில் அதிமுகவிற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார். தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சவ்மியா அன்புமணி குறித்து பல்வேறு பதிவுகளையும், அவர்கள் மகள்கள் பிரச்சாரம் செய்தது குறித்து சர்ச்சையான கருத்துக்கள் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரில் அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். இதையறிந்த அதிமுகவினர், பாமகவினரும் ஆபாசமாக பதிவிட்டுள்ளனர். இதனிடயே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தெய்வானை தலைமையில், 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சமூக வலைத்தளங்களில் போடும் பதிவுக்கு எல்லாம் கைது செய்வீர்களா என்று கேள்விகள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்