அதிமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி - 3,150 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, 20 வகை காய்கறி

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.

Update: 2020-05-23 12:21 GMT
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார். எடப்பாடி பயணியர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 ஆயிரத்து 150 பேருக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் 20 வகையான காய்கறி தொகுப்பினை அவர் வழங்கினார். இதை தொடர்ந்து வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, வருவாய் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்