லாக்கருடன் நகைகளை அள்ளி சென்ற கொள்ளையர்கள் - தாம்பரத்தில் அதிர்ச்சி

Update: 2024-04-27 13:03 GMT

சென்னை, தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை லாக்கருடன் தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

சிட்லம்பாக்கத்தில் வசித்து வரும் ரங்கராஜ் என்ற முதியவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தன் தந்தையின் நூறாவது பிறந்தநாளை கொண்டாட முதியவர் மயிலாப்பூருக்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். புகாரின் அடிப்படையில் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த குமரன் மற்றும் நெல்லையை சேர்ந்த வெள்ளை செந்தில் ஆகிய இருவரை கைது செய்திருக்கின்றனர். இதில், வெள்ளை செந்தில் மீது 4 கொலை வழக்குகள் உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்